மனைவியை குத்திக்கொன்ற கணவன்… நெஞ்சு பதைபதைக்கும் கோர சம்பவம்!!

305

மதுரையில்..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கட்ட குளத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 38). இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பூங்கொடி மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார்.

கணவன் வேலைக்கு செல்லாத நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பூங்கொடி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

சம்பவத்தன்று பூங்கொடி வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது அங்கு வந்த ராஜேஷ் கண்ணன் அவரிடம் தகராறு செய்து கத்தியால் சரமாரியாக குத்தியதில் பலத்த காயமடைந்த பூங்கொடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து பூங்கொடியின் உறவினர்கள் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஒரு வாரம் ஆகியும் குற்றவாளியை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம் மறியலில் ஈடுபட்ட முயன்றவர்களை சமரச பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் குற்றவாளியை கைது செய்வதாக உறுதியளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு சென்றனர்.

இந்த நிலையில், தற்போது பூங்கொடியை கொலை செய்த அவரது கணவர் ராஜேஷ் கண்ணனை வாடிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து பூங்கொடியின் உறவினர்கள் கூறும்போது, குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி மறியல் செய்ய முயன்றதால்தான் தற்போது விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கூறினார்.