சாலை விபத்தில் காதலன் மரணம்.. பிரிய முடியாமல் காதலி எடுத்த விபரீத முடிவு!!

300

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கோவில்பதாகை பூம்பொழில் நகரை சேர்ந்தவர் வினோதினி. இவரும், அதேபகுதியில் உள்ள முத்தாபுதுப்பேட்டையில் வசித்து வரும் வசந்த் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி கும்மிடிப்பூண்டி அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த வசந்த் உயிரிழந்தார். இதன் காரணமாக வினோதினி பெரும் சோகத்தில் மூழ்கினார்.

நாட்கள் சென்றாலும் காதலன் பிரிவை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் மன வேதனையில் இருந்துவந்த வினோதினி, தனது காதலன் சென்ற இடத்துக்கே செல்வதாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வீட்டில் மகள் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடப்பதை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலன் உயிரிழப்பை தாங்க முடியாமல் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.