தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன்… ஒரு நிமிடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

511

சென்னையில்..

தன் தாயின் சேலையில் வீட்டிற்குள்ளேயே ஊஞ்சல் கட்டி விளையாடிய 1ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் ஐஸ்வந்த் (5 ) பரிதாபமாக உயிரிழந்தான். விளையாட்டி வினையாகி,தன் தாயின் சேலையே உயிரைப் பறித்தது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் கண்ணப்பன். தனியார் டிராவல்ஸ் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மீனா. இவர்களுக்கு ஜஸ்வந்த் (5), மயிலேஷ் (2) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஜஸ்வந்த், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்1ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் பள்ளி விடுமுறை நாளான நேற்று ஜஸ்வந்த், தாயின் சேலையை எடுத்து, தனது தம்பியுடன் வீட்டின் மாடியில் ஊஞ்சல் கட்டி இருவருமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஜஸ்வந்த் கழுத்தில் புடவை சுற்றிய நிலையில் மயங்கி கீழே விழுந்துள்ளான். இதையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடிவந்து பார்த்த போது ஜஸ்வந்த் கீழே மயங்கிய நிலையில் கிடந்துள்ளான்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஜஸ்வந்தை உடனடியாக தூக்கிக் கொண்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஜஸ்வந்தைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருமுல்லைவாயில் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 5 வயது சிறுவன் தாயின் சேலையில் சிக்கி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.