வவுனியாவில் போதையை ஏற்படுத்தக்கூடிய மருந்து விற்பனை : 400 மருந்து வில்லைகளுடன் ஒருவர் கைது!!

1045

மருந்து வில்லை..

வவுனியாவில் போதையினை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை விற்பனை செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 400 மருந்து வில்லைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

போதையினை ஏற்படுத்தக்கூடிய மருந்து விற்பனை செய்வதாக போதை தடுப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி ஆலோசனையில்,

உப பொலிஸ் பரிசோதகர் மதுசங்க வழிகாட்டலில் பொலிஸ் சார்ஐன் ஹேரத் (14692), பொலிஸ் கொஸ்தாபர்களான ரணில் (81010), சமிந்த (82175), மிதுசன் (91800), தினேஸ் (99172) ஆகியோர் அடங்கிய குழுவினர் திருநாவற்குளம் பகுதியில் குறித்த நபர்களை மறித்து சோதனை நடவடிக்கைளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது அவரின் உடமையிலிருந்து PREGABALIN CAPSULES GABIN-150 என்ற போதையினை ஏற்படுத்தக்கூடிய 400 மருந்து வில்லைகளை கைப்பற்றியதுடன் குறித்த மருந்துனை வைத்திருந்த 23வயதுடைய இளைஞளை பொலிஸார் கைது செய்தனர்.

PREGABALIN CAPSULES GABIN-150 என்ற குறித்த மருந்துகள் அளவிற்கு அதிகமாக உள்கொள்ளும் சமயத்தில் போதையினை ஏற்படுத்தக்கூடியது எனவும் மருந்தகங்களில் 20 ரூபா தொடக்கம் 50 ரூபாவிற்குள் விற்பனை செய்யப்படும் மருந்தினை,

இவர்கள் 500ரூபா தொடக்கம் 600ரூபா வரையில் விற்பனை செய்வது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் சந்தேக நபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.