ஹோட்டலில் நடனம் ஆடிய பெண் மர்ம மரணம்.. குடும்பத்தாருக்கு அதிர்ச்சி.!!

303


புதுச்சேரியில்..



புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கீழக்காசாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணா வயது 33. திருமணமாண இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக துபாய்க்கு நடனம் ஆடுவதற்காக கடந்த ஆண்டு சென்று உள்ளார்.



ஒப்பந்த அடிப்படையில் அங்குள்ள ஹோட்டல்களில் நடனம் ஆடுவதற்காக சென்ற இவர் கடந்த 24-ஆம் தேதி இரவு வரை தனது குழந்தைகளுடனும் தொலைபேசி நலமாக இருப்பதாக கூறி இருக்கிறார். ஆனால் நேற்று காலை அவர் இறந்து விட்டதாக அவரது உடன் சென்ற தோழிகள் அருணாவின் கணவருக்கு தொலைபேசியில் கூறியுள்ளனர்.




இதன் பிறகு அந்த ஹோட்டல் உரிமையாளர் இவரது குடும்பத்தாரிடம் தொடர்பு கொண்டு அருணா இறந்து விட்டதாக கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அருணாவின் உடலை எப்படியாவது மீட்டுத் தர வேண்டும் என்று காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் பாஸ்கரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


அதன்பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் எங்களது வறுமைக்காக திரைப்பட நடனங்களை ஆடி வருகிறோம். அருணா துபாய் சென்று அங்கு ஹோட்டல்களில் நடனம் ஆடி வருகிறார்.

24-ஆம் தேதி கூட எங்களோடு பேசியவர் இப்போது இறந்து விட்டதாக தகவல் வந்ததும் அதிர்ச்சி அடைகிறோம். அவர் மாறி மாறி ஹோட்டல்களில் நடனம் ஆட வைக்கப்பட்டு இருக்கிறார் என்ற செய்தியும் நாங்கள் அறிந்தோம்.


இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது நிகழ்ந்ததா என்பது மர்மமாகவே உள்ளது. எனவே இந்திய அரசாங்கம் அருணாவின் உடலை எங்களுக்கு விரைவாக மீட்டு தந்தும், அவரது இறப்பு குறித்து சரியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.