காரில் துணை நடிகையிடம் எல்லை மீறிய ஆண் நண்பர்.. நடுரோட்டில் நடந்த தகராறு!!

271

மதுரையில்..

மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் வாகனங்கள் பரபரப்பாக சென்றுக்கொண்டிருந்த நிலையில், நின்றுக்கொண்டிருந்த சொகுசு காரின் உள்ளே இளம்ஜோடி சண்டை போட்டுள்ளனர்.

இதனை அப்பகுதியினர் பார்த்தபோதும் யாரும் சென்று கேட்கவில்லை. சிறிது நேரத்தில் காரில் இருந்து இறங்கிய அவர்கள் நடுரோட்டில் ஆக்ரோஷமாக சண்டையிட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்துசென்ற போலீசார், சண்டையிட்ட இளைஞர், இளம்பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்பெண் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த துணை நடிகை அங்கீதா விஸ்வநாத் என்பது தெரியவந்தது.

இவருடைய ஆண் நண்பர் பீகாரை சேர்ந்த நிதிஷ்குமார் என்பவருடன் மும்பையில் இருந்து கோவையில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து கோவையில் வாடகைக்கு கார் எடுத்து கொண்டு இருவரும் தமிழகத்தை சுற்றிபார்க்க சென்றனர்.

மதுரையில் நேற்றைய தினம் விடுதி ஒன்றில் தங்கிய இருவரும் ராமேஸ்வரம் செல்ல தயார் நிலையில் இருந்தனர். தன்னிடம் நிதிஷ்குமார் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என்றும் தனது பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் குற்றச்சாட்டி பெண் தகராறு செய்தார். ஆனால் இளைஞர் இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.

இதையடுத்து இருவரையும் எச்சரித்த போலீசார் மீடும் அவரவர் சொந்த ஊருக்கு உடனே செல்லவேண்டும் என கூறினார். அவர்களுடைய ஆதார் ஆவணங்களை போலீசார் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

மேலும் அவர்களின் போன் எண்ணையும் வாங்கிக் கொண்டனர். கஞ்சா, மது உபயோகித்திருந்தனரா என்பதையும் போலீசார் சோதனையிட்டனர். துணை நடிகை மோதலால் பரபரப்பு நிலவியது.