ஆரணி மில்லர்ஸ் வீதியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடம் அருகில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசித்தவர் அழகுராஜா (வயது32). இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. மேலும் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அழகுராஜா வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ மளமளவென்று பரவியது. வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரணி நகர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இலங்கை அகதியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.