மனைவியை துண்டு, துண்டாக்கி தண்ணீர் தொட்டியில் மறைத்த கொடூர கணவர்.. பகீர் வாக்குமூலம்!!

245

சத்தீஸ்கரில்..

அன்னியோன்ய தம்பதிகள் , ஆதர்ச தம்பதிகள் காலமெல்லாம் மலையேறி விட்டது. கணவன் குடித்து விட்டு அடித்தால் வாங்கிக் கொண்டது எல்லாம் பழைய காலம். குடித்து விட்டு வந்தால் தலையில் கல்லை தூக்கி போடு. மாற்றாள் வீட்டுக்கு கூடையில் சுமந்தது புராண காலம், இப்போதெல்லாம் விஷம் வைத்து கொலை என கொடூரமாகி வருகிறது.

அதே போல் மனைவி சொல் பேச்சு கேட்கவில்லை எனில் அவளை கொலை செய்து நாய்களுக்கு விருந்தாக்கு, துண்டு துண்டாக்கி கடலில் வீசு, நடுக்காட்டில் தூக்கில் தொங்கவிட்டு விலங்குகளுக்கு உணவாக்கு என கொடூர வாழ்க்கை முறையாகி விட்டது. அதே போல் மீண்டும் ஒரு சம்பவ சத்தீஸ்கரில் நடைபெற்றுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள உஸ்லாபூர் பகுதியில் வசித்து வருபவர் பவன் சிங் தாக்கூர். இவருக்கும் சதி சாஹு என்ற பெண்ணுடன் திருமணமாகி உள்ளது.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவர் பவன் தாக்கூருக்கு மனைவி சதி சாஹுவின் நடத்தையின் மீது சமீப காலமாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரத்தில் மனைவி மனைவி சதியை கணவர் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கொலையை மறைக்கும் விதமாக மனைவியின் உடல் பாகங்களை பல துண்டுகளாக வெட்டி வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு வைத்துள்ளார். சம்பவம் நடந்து இரு மாதங்கள் கடந்த நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

சந்தேகம் அடைந்த அண்டை வீட்டார் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது, தண்ணீர் தொட்டியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி மறைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் பவன் தாக்கூரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.