தாயின் நிலையைப் பார்த்து மனமுடைந்த மகன்.. இருவரும் ஒன்றாக எடுத்த விபரீத முடிவு!!

420

ஈரோட்டில்..

ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (45). லொறி சாரதியான இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை இறந்துவிட்டதால், 70 வயதான தாய் சம்பூரணத்துடன் வசித்து வந்தார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சம்பூரணம் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவரது உடல்நலம் சீராகவில்லை என்பதால் நந்தகுமார் மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சம்பூரணம் மற்றும் நந்தகுமார் ஆகிய இருவரும் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

தாய்-மகன் இருவரும் ஒன்றாக தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த நந்தகுமாரின் அண்ணன் உதயகுமார்(48) தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.