நடிகைக்கு நடந்த விபரீதம்… ஆதாரங்களை வெளியிட்டு கண்ணீர் புகார்!!

1343

கர்நாடகாவில்..

வளர்ந்துவரும் இளம் தமிழ் நடிகை அனிகா விக்ரமன். இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் என்றாலும், பள்ளிப்படிப்பை சென்னையிலும், கல்லூரி படிப்பை பெங்களூரிலும் முடித்தவர்.

பின்னர் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சென்னை வந்தார். கே என்னும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து எங்க பாட்டன் பார்த்தியா, விஷமக்காரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளப்படங்களில் இவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், தனது காதலன் தன்னை கொடூரமாக தாக்கியதாக புகைப்படத்துடன் புகார் கூறியிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பதிவில், நான் அனூப் பிள்ளை என்ற நபரை காதலித்து வந்தேன்.

அவர் பல ஆண்டுகளாக என்னை மனதளவிலும், உடலளவிலும் சித்ரவதை செய்து வந்துள்ளார். முதலில் சென்னையில் வைத்து என்னை தாக்கினார். ஆனால் அதன்பின்னர் காலில் விழுந்து அழுததால் அதனை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டேன்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக என்னை துன்புறுத்தியதால் பெங்களூரு போலீசில் புகார் அளித்தேன். ஆனால் அவர் காவல்துறையினரிடம் பணம் கொடுத்து என்னை சிக்கவைத்தார்.

இதன்பின்னர் கடந்த சில ஆண்டுகளாக அனூப்பால் நான் ஏமாற்றப்பட்டு வருவதை அறிந்தேன். அதனால் அவரை விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால் அவர் என்னை விட்டு பிரிய தயாராக இல்லை.

இதனிடையே, நான் ஷூட்டிங் போகாமல் இருக்க மொபைலை உடைத்தார். அதற்கு முன், என் வாட்ஸ்அப்பை எனக்கு தெரியாமல் லேப்டாப்பில் இணைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் என்னையும், எனது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார். தற்போது அனூப் நியூயார்க்கில் தலைமறைவாக உள்ளார்.

அவரது சித்திரவதையால் ஏற்பட்ட காயங்கள் இப்போது கொஞ்சம் சரியாகிவிட்டது. நானும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன். அடுத்த வாரம் முதல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வேன், என நடிகை அனிகா தெரிவித்துள்ளார். உடல் முழுக்க காயத்துடன் அனிகா விக்ரமன் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.