அம்பலமான கணவனின் ரகசியம்… 2 வாரத்தில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

346

கரூரில்..

கரூரில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் உறவு இருப்பதாக கூறி புதுப்பெண் உருக்கமாக வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை. ”எனக்கு பிப்ரவரி 23 ஆம் தேதிதான் திருமணம் நடந்தது…

எனக்கு திருமணமாகி என் புருஷனுடன் இல்லற வாழ்வில் இரண்டு நாட்கள் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருந்தேன்” என்று தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகபிரியா (27). இவர் பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

ராகப்பிரியாவிற்கும், சுதர்சன் என்பவருக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் சுதர்சனுக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இடையே தகாத உறவு இருந்ததாக ராகபிரியாவிற்கு தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மணமுடைந்து காணப்பட்ட ராகப் பிரியா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு இறந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்தற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருமணம் ஆன இரண்டு வாரங்களில் புதுப்பெண் தூக்கு மாட்டி இறந்ததால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், தனது தற்கொலைக்கு கணவர்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, ராகபிரியா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அந்த கடிதத்தில், எனக்கு பிப்ரவரி 23 ஆம் தேதிதான் திருமணம் நடந்தது… எனக்கு திருமணமாகி என் புருஷனுடன் இல்லற வாழ்வில் இரண்டு நாட்கள் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருந்தேன்.

சுதர்சனுக்கு என் மேல் துளிகூட விருப்பம் இல்லை என்று 13 தினங்களில் புரிந்துகொண்டேன். என்னை மனதளவில் மிகவும் பாதிப்படைய செய்தான் சுதர்சன். என் குடும்பத்துக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன்..

என் மரணத்துக்கு ரம்யாவும், சுதர்சனும் தான்” என்று அதில் எழுதியுள்ளார் ராக்பிரியா.இந்த சம்பவம் குறித்து கரூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணத்துக்கு முன்பு மாப்பிள்ளை/மணமகள் குறித்து தீர விசாரிக்காமல் வரன் அமைந்தால் போதும் என்று நினைத்தால் சில நேரங்களில் என்ன மாதிரியான அசம்பாவிதங்கள் நடக்கும் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணமாக அமைந்துள்ளது.

27 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி இல்லற வாழ்க்கையில் பல கனவுகளோடு இணைந்த நேரத்தில் கணவனுக்கு திருமணத்துக்கு முன்பே தகாத உறவு இருந்த விவகாரம் தெரிந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.