பிறந்த நாளே இறந்த நாளான சோகம்.. கதறும் குடும்பம்!!

416

சேலத்தில்..

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவருக்கு நேற்று பிறந்தநாள். இதனால் அவரது கல்லூரி நன்பவர்கள் சேர்ந்து பிறந்தநாளைக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். அன்படி ரஞ்சித் வீட்டு அருகே இருக்கும் நண்பர்கள் சுந்தர் மற்றும் கவுதம் ஆகிய இருவர் அவரை கல்லூரியிலிருந்து அழைத்து வருவதற்காக சென்றனர்.

பின்னர் ரஞ்சித்தை அழைத்துக் கொண்டு மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கிருந்த மக்கள் மூன்று பேரையும் மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ரஞ்சித் குமார் மற்றும் கவுதம் இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் சுந்தர் கவலைக்கிடமான நிலையில் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாள் அன்றே ரஞ்சித் குமாரும் அவரது நண்பர் கவுதமும் உயிரிழந்த சம்பவம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.