எந்நேரமும் தூங்கும் மனைவி…வேதனையுடன் காவல் நிலையம் சென்ற கணவர்!!

370

பெங்களூருவில்..

மனைவி எந்நேரமும் தூங்கிக் கொண்டே இருப்பதாக கணவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெங்களூருவில் கணவர் ஒருவர், தனது மனைவி எந்நேரமும் உறங்கி கொண்டே இருந்து, தன்னை துன்புறுத்துவதாக பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக கணவர் கம்ரான் கான், கௌசர் பசவனகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து மனைவி ஆயிஷா ஃபர்ஹின் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாமனார் அரிபுல்லா மற்றும் மாமியார் ஹீனா மீது கம்ரான் கான் புகார் அளித்துள்ளார். மாலை 5.30 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை மனைவி ஆயிஷா தூங்குவதாகவும், பிறகு இரவு உணவுக்கு பின் மீண்டும் தூங்கும் மனைவி ஆயிஷா அடுத்த நாள் மதியம் 12.30 மணிக்கு தான் எழும்புவதாக கணவர் கம்ரான் கான் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் வீட்டில் எந்த வேலையும் அவள் செய்வது இல்லை என்றும், தன்னுடைய அம்மா தான் சமைப்பது முதல் சுத்தம் செய்வது வரை பார்க்கிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இதையே மனைவி ஆயிஷா செய்து வருவதாக கம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.