இலங்கைக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆறு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நேற்று ஆரம்பமானது.
இலங்கைக்கு எதிராக இடம்பெற்ற நேற்றைய முதல்நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்த தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை எடுத்தது.
இலங்கை அணி சார்பில், மஹேல ஜெயவர்த்தன 52 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
மேற்கிந்திய தீவுகள் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சுனில் நரேன் 4 விக்கெட்டுக்களையும், ரவி ராம்போல் 3 விக்கெட்டுக்களையும், பிராவோ 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 209 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 37.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கைக் கடந்தது.
மேற்கிந்திய தீவுகள் சார்பில் சிறப்பாக துடுபெடுத்தாடி, 109 ஓட்டங்களை குவித்த கெய்ல் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார்.