வவுனியா மேல் நீதிமன்ற உத்தரவையடுத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா கைது!!

973

ஸ்ரீ ரங்கா கைது..

வவுனியா மேல் நீதிமன்ற உத்தரவையடுத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (17.03) மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி வாகன விபத்து ஒன்றில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், குறித்த வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளரை அச்சுறுத்தியதாக தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (17.03) உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.