சோமாலியாவின் அல்-ஷபாப் மூத்த தலைவர் அரச படையிடம் சரண்..!

454

சோமாலியாவில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான அல்-ஷபாப் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹஸன் தாஹீர் ஆவேயெஸ் அரச படைகளிடம் சரணடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

தலைநகர் மொகதீஷூவிலிருந்து வடக்காக சுமார் 500-கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடாடோ நகரில் அவர் அரச படையினரிடம் சரணடைந்துள்ளார்.

அல் ஷபாப் இயக்கத்துக்குள்ளேயே கடந்த வார இறுதியில் உள்மோதல்கள் வெடித்தன. அதன் பின்னரே ஆவேயஸ் சரணடைந்துள்ளார்.

அவரை என்ன செய்வது என்று கலந்தாலோசிப்பதற்காக பழங்குடி சமூகத் தலைவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, மொகதீஷுவில் உள்ள பிபிசி செய்தியாளரிடம் பேசியுள்ள சமூகத் தலைவர்கள், ஆவேயஸ் சரணடைந்துள்ளதை ஏற்க மறுப்பதாகவும் மொகதீஷுவுக்கு வரவும் மறுப்பதாகவும் கூறியுள்ளனர்.

அல்-ஷபாப் இயக்கத்தின் ஆன்மீகத் தந்தையாக ஆவேயஸ் கருதப்பட்டுவந்தவர். ஐநாவாலும் அமெரிக்காவாலும் பயங்கரவாதியாகவும் கருதப்படுகிறார்.

(BBC)