வழியின்றி தவிக்கும் பிள்ளைகள்.. கடன் தொல்லையால் கணவன், மனைவி இருவரும் எடுத்த விபரீத முடிவு!!

1214

அம்பத்தூரில்..

அம்பத்தூர் லெனின் நகரில் வசித்து வருபவர் பகத்சிங். இவர் எஸ்ஐ.ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் 45 வ் வயது முருகேசன்.இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவருடைய மனைவி 30வயது ஜெயந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுடன் முருகேசன் தம்பி ராம்குமார், தங்கை பவானி. இவர்கள் கூட்டுகுடும்பமாக வசித்து வந்தனர்.

முருகேசன், ஆன்லைன் வர்த்தகம் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் பணி செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கும் இதில் தொடர் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இவரின் செலவுகளுக்காக தம்பி ராம்குமார், தங்கை பவானி அனைவரிடமும் கடன் பெற்று சமாளித்து வந்தார்.

கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஆன்லைன் வர்த்தகத்தில் மீண்டும் நஷ்டம் ஏற்பட்டதால், முருகேசனுக்கு மீண்டும் கடன் ஏற்பட்டது.இதனை ஈடுகட்ட தம்பியிடம் 3 சவரனும், தங்கையிடம் 5 சவரனும், நண்பர்களிடமும் கடன் வாங்கினார்.

அடுத்தடுத்த தொடர் நஷ்டம் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கியது இவைகளால் முருகேசன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். அத்துடன் கடன் கொடுத்தவர்கள், பணத்தை தரும்படி நெருக்க தொடங்கினர்.

மனைவியிடம் கூறி அவ்வப்போது வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இருவரும் அடிக்கடி தனியே ஏதோ ரகசியம் பேசினர். அவர்களின் வீடு அமைந்துள்ள செங்குன்றம் அடுத்த எல்லையம்மன் பேட்டைக்கு சென்று வருவதாக கூறி கணவன் மனைவி இருவரும் கிளம்பினர்.

வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பகத்சிங் முருகேசனுக்கு போன் செய்தார். போனை எடுக்காததால் அவரின் வீட்டிற்கு அருகில் இருப்பவருக்கு போன் செய்து விசாரித்தார். பக்கத்து வீட்டுக்காரர் வரும் போது பார்த்தது தான்.

அதன் பிறகு கதவு திறக்கப்படவே இல்லை எனக் கூறியதும் முருகேசன் அதிர்ச்சியடைந்தார். பகத்சிங், உடனடியாக செங்குன்றத்துக்கு சென்று நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அப்போது, கணவன், மனைவி தனித்தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.