திருமணமான ஒரே மாதத்தில் கணவனின் கழுத்தை அறுத்த புதுப்பெண்!!

525

மயிலாடுதுறையில்..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சாலிய தெருவை சேர்ந்த சரவணன்(30), என்ற இளைஞருக்கு நாகையை சேர்ந்த நந்தினி என்ற தாட்சாயிணியை(25) பெண் பார்த்து, கடந்த பிப்ரவரி 3ஆம் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இந்த இளம் தம்பதியர் ஒரு மாதம் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி நந்தினி திடீரென காணாமல் போனார். அதன் பின்னர் தான் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது நந்தினி தனது கணவரை சரவணனை தாக்கி கட்டிப் போட்டு கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றுள்ளார் என்பது. பின்னர் அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புதுமாப்பிள்ளை சரவணன் குத்தாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது தான் புதுபெண் நந்தினி, தனது காதலரான நாகையை சேர்ந்த ராஜசேகர் (38) என்பவருடன் சேர்ந்து கொண்டு கணவரை தாக்கி விட்டு அவருடன் ஓடியது தெரிய வந்தது.

பின்னர் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த நந்தினி, அவரது காதலர் ராஜசேகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது மேலும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.

அதாவது, திருமணத்திற்கு முன்பே நந்தினியும், ராஜசேகரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் நந்தினி, சரவணனை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் நந்தினி, தனது காதலர் ராஜசேகருடன் பேசி வந்துள்ளார். இதை அறிந்த சரவணன் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நந்தினி, தனது காதலர் ராஜசேகரை வீட்டுக்கு வரவழைத்து, பின்னரும் இருவரும் சேர்ந்து கொண்டு சரவணனை தாக்கியுள்ளனர்.

மேலும் அவரை கட்டிப் போட்டு தாக்கி கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றுள்ளனர், என்பது விசாரணையில் அம்பலமானது. நல்வாய்ப்பாக கழுத்தில் ஆழமாக வெட்டு படவில்லை என்பதால் சரவணன் காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.