தந்தை இறந்ததைத் தாங்க முடியாமல் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

321

சென்னையில்..

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் தெருவில் சரவணன் என்பவர் தனது மனைவி, மகள் கீர்த்தியுடன் வசித்து வந்துள்ளார். கீர்த்தி தனது தந்தை மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்வு அவரது குடும்பத்தில் புயலை வீசியது. சரவணன் மறைவுக்கு பிறகு மனைவி, மகள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.

தந்தையின் நினைவில் வாடி வந்த கல்லூரி மாணவி கீர்த்தி தனது அம்மாவுடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். தந்தை மறைவுக்கு பிறகு கீர்த்தி யாரிடமும் பேசாமல் தனியாகவே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கீர்த்தியின் தாய் வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில், மகள் கீர்த்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தந்தையின் மரணத்தால் வேதனையின் இருந்த மகள், மின்விசிறியில் தூக்கிட்டுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கீர்த்தியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கீர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை மறைவால் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.