காதல் தோல்வியால் நடுரோட்டில் இளம்பெண் ரகளை… வைரலாகும் வீடியோ!!

1789

மத்திய பிரதேசத்தில்..

முன்பெல்லாம் காதல் தோல்வியில் இளைஞர்கள் தான் குடித்து விட்டு தேவதாஸ் போல் தாடி வளர்த்து திரிவர். அந்த காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் பெண்களும் பாட்டிலும் கையுமாகத் தான் அலைகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் குடித்து விட்டு ரகளை செய்து கொண்டிருந்தார். சமூக வலைதளங்களில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த பெண் செய்யும் ரகளை காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் மது போதை காரணமாக அவர் இவ்வாறு செய்ததாக விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோவில், ஒரு பெண் சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிகிறார்.

அத்துடன் சாலையில் செல்லும் மக்களை எல்லாம் அவர் படுத்தி எடுக்கிறார். கார் மீது ஏறி நடனம் ஆடுகிறார். தள்ளாடிக் கொண்டே ஒருவரின் பைக்கை பிடுங்குகிறார். சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகளை கீழே தள்ளி விடுகிறார்.

பல பெண்கள் அவரை அங்கிருந்து அழைத்துச்செல்ல முயற்சி செய்கின்றனர். அவர் யாருக்கும் அடங்கவில்லை. அங்கு சுற்றி இருந்த பெண்கள் அந்த பெண்ணுக்கு எடுத்துச்சொல்லி புரிய வைக்கிறார்கள்.

இந்த சம்பவத்தை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் “காதலில் கிடைத்த தோல்வியால் பெண் செய்த கலாட்டா.. இது குவாலியரின் பூல் பாக் சந்திப்பில் நடந்த சம்பவம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.