கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி கை கழுவிய காதலன்… சடலத்தை மூட்டைக்கட்டி, கிணற்றில் வீசிய கொடூரம்!!

508

செட்டிபாளையத்தில்..

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் கொங்கர்பாளையம் தண்டுமாரியம்மன் கோவில் கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த பெண் கர்ப்பிணி என்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் கோபி செட்டிபாளையத்தில் தனது மகள் ஸ்வேதாவை காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த ஸ்வேதாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்தது.

லோகேஷ், ஸ்வேதாவை தனது பாட்டி வீட்டில் வைத்து தனிமையில் அவ்வப்போது சந்தித்து வந்தார். இதனால் ஸ்வேதா கர்ப்பமானதும் அவரை விட்டுவிட்டு வேறோரு பெண்ணிற்கு பின்னால் சென்று விட்டார். இதனால் ஸ்வேதா லோகேஷ் வேலை செய்யும் இடத்திற்கே சென்று நியாயம் கேட்டுள்ளார்.

தான் கௌரவமாக வாழ வழி செய்யுமாறு கெஞ்சியுள்ளார். இதனை அடுத்து வழக்கம் போல் சந்திக்கும் பாட்டி வீட்டில் ஸ்வேதாவை சமாதானம் செய்துள்ளார். அவர் சமாதானம் ஆனதும் காதலிக்கு உணவு வாங்கி வர லோகேஷ் வெளியில் சென்று விட்டார். அந்த நேரத்தில் ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

திரும்பி வந்து பார்த்த லோகேசுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. இறந்த காதலியின் சடலத்தை மறைக்க அதை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி தூரத்தில் உள்ள விவசாய கிணற்றில் வீசி விட்டு சென்று விட்டார்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லோகேஷ் தனிப்படை அமைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரிக்கு சென்ற மாணவி கிணற்றில் கர்ப்பிணியாக சடலமாக மிதந்தது அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.