காதல் திருமணம் செய்து ஒரு மாதம் கூட ஆகவில்லை.. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

1647

திருப்பத்தூரில்..

சிலருக்கு காதலித்தவரையே திருமணம் செய்து கொள்ளும் பேறு கிடைப்பது எல்லாம் வரம் தான். ஆனா… காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக் கொண்டவர்களில் எத்தனைப் பேர் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதில் இருக்கிறது காதலின் வெற்றி.

காதலிக்கும் போது இருக்கிற சுகமும், உறுதியும் திருமணத்திற்கு பிறகு காணாமல் போய்விடுவது தான் பலரது வாழ்வில் சறுக்க துவங்குகிறது. காதலிச்சவரையே கைப்பிடித்து முழுசா ஒரு மாசம் கூட முடியலை.. ஆசை முப்பது நாள்னு சொல்வாங்க… முப்பது நாள் கூட ஆகலை…

அதுக்குள்ள 26 வயசான அனுப்பிரியா தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது உறவினர்களையும், நண்பர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்தனைக்கும் கல்யாணத்துக்கு அப்புறமா சந்தோஷமா வாழ்றதா தான் எல்லோரிடமும் சொல்லி வந்திருக்கிறார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள விண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் அனுப்பிரியா (26). சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்த அனுப்பிரியா, வங்கி பணிக்கான தேர்வு எழுதுவதற்காக ஆம்பூரில் தனியார் பயிற்சி மையம் ஒன்றிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆம்பூர் மின்னூரைச் சேர்ந்த திருமுருகன் (26) என்பவருடன் பயிற்சி வகுப்பின் போது பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் இருவரும் ஆம்பூரில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் மின்னூர் பகுதியில் இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்நிலையில், காதல்… கல்யாணத்தில் முடிந்ததும் பொருளாதாரம் இருவரின் முகத்திலும் அறைய துவங்கியுள்ளது.

இது குறித்து கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. தகராறு முற்றியதில், வாழ்வை வெறுத்த அனுப்பிரியா, மன அழுத்தத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தாலுகா போலீசார் அனுப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அனுப்பிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்து தகவல் அறிந்து வந்த அவரது பெற்றோர்களும், உறவினர்களும் ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்தின் முன்பு குவிந்தனர். மேலும் அனுப்பிரியாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணமாகி முழுசாக ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில், புதுப்பெண் மரணமடைந்ததால், அனுப்பிரியாவின் இறப்புக்கான காரணம் குறித்து வாணியம்பாடி கோட்டாட்சியர் பிரேமலதா விசாரனை நடத்தி வருகிறார். இந்நிலையில் திருமுருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.