முல்லைத்தீவில் சோகத்தை ஏற்படுத்திய சகோதரர்களின் மரணம்.!!

1113

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – வவுணிக்குளத்தில் நீராட சென்ற இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்றைய தினம் (26.04.2023) இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் யாழ். நல்லூர் யமுனா வீதி பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சுரேஷ் (27) , ரவிச்சந்திரன் சுமன் (16) ஆகிய இரு சகோதரர்களுமே உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து மரண வீடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் நீராட சென்ற போது, குளத்தின் பிரதான வாய்க்கால் பகுதிக்குள் இளைய சகோதரர் நீராடிக்கொண்டிருக்கும்போது நீரில் அவர் தத்தளிப்பதைக் கண்டு, மூத்த சகோதரர் அவரை காப்பாற்ற முற்படும்போதே இருவரும் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.