காதலியை கொலை செய்து உடலை ஏரியில் வீசிய காதலன்.. நெஞ்சை உலுக்கிய கொடூரம்!!

466

காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த ஏலாகாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தாரா, தனது கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.

இதில் மூன்றாவது மகள் ஷீபா (24) குன்னவாக்கம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ஷீபா பின்னர் வீடு திரும்பவில்லை.

எங்கு தேடிபார்த்தும், தோழிகளிடம் விசாரித்தும் கிடைக்கவில்லை. இதனையடுத்து மகளை கண்டுபிடித்து தரக்கோரி தாயார் தாரா ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் வாலாஜாபாத் அடுத்த கோவல வீடு ஏரிக்கரை கால்வாயில் இளம் பெண் சடலம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு விசாரித்தபோது, அது காணாமல்போன இளம்பெண் ஷீபா என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பண்ருட்டி கிராமத்தை சேர்ந்த சாமுவேல் (25) என்ற இளைஞர்தான் காரணம் என்பது தெரியவந்தது. சொந்தமாக லாரி வைத்து ஒட்டி வந்த சாமுவேல்- ஷீபாவும் ஆகிய இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், சாமுவேல் பெற்றோர்கள் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய பெண் பார்த்து வந்த நிலையில், இந்த விவகாரம் ஷிபாவுக்கு தெரியவந்தது. இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து ஷீபா வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் ஷீபாவை சாமுவேல் கொலை செய்துவிட்டு கோவலமேடு ஏரிக்கரை கால்வாயில் உடலை போட்டுவிட்டு சென்றதாக தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சாமுவேலை ஒரகடம் போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.