சிறுவனின் காதுக்குள் கூடு கட்டிய தேனீ… கதறித் துடித்த சிறுவன்!!

748

தமிழகத்தில்..

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியது. இதனால் சிறுவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து நேரத்தை கழித்து வருகின்றனர்.

அதேநேரம் சிறுவர்கள் நீர்நிலைகளுக்கு சென்று குளித்து சிக்குவது, மலைப்பகுதிகளுக்கு சென்று ஆபத்தில் சிக்குவது, பைக்குகளை ஓட்டி விபத்து ஏற்படுவது பேன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது சிறுவர்கள் மூவருக்கு ஏற்பட்ட பாதிப்பு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில், மோகன்பாபு என்ற பத்தாம் வகுப்பு மாணவன் தேன் எடுக்க சென்றுள்ளான்.

அந்த வகையில், தேன் எடுக்க முயன்றபோது மோகன்பாபுவின் காதுக்குள் தேனீ புகுந்தது. இதனால் காது வலி ஏற்பட்டு சிறுவன் துடித்துள்ளான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலியால் துடித்த மாணவனை பெற்றோர், குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு நீண்டநேரம் உரிய சிகிச்சை அளித்து, சிறுவனின் காதுக்குள் உயிருடன் இருந்த தேனீயை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். அதேநேரம் தேனீ கொட்டியதில் காயமடைந்த மேலும் 2 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.