வவுனியாவில் இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை பேரூந்து மோதி ஒருவர் படுகாயம் : சாரதி கைது!!

590

வவுனியா குழுமாட்டுச் சந்தியில் இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து வீதியில் சென்றவரை மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழுமாட்டுச்சந்தியில் வீதியினை மாறமுற்பட்ட நபரை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மோதித்தள்ளியுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெளுக்குளம் பொலிஸார் சாரதியினை கைது செய்துள்ளமையுடன் பேரூந்தினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.