யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பரிதாபமாக மரணம்!!

1723

யாழ்ப்பாணத்தில்..

யாழ். ஆனையிறவில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி சாரையடி பகுதியைச் சேர்ந்த 27 வயதான சத்தியமூர்த்தி சத்தியன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹயஸ் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி சில தினங்களுக்கு முன்னர் இவ்விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.