விபரீத முடிவெடுத்த கஜினி பட நடிகை : கைதான பிரபல நடிகர் விடுதலை!!

520

ஜிஹா கான்..

படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய கஜினி பட நடிகை ஜிஹா கான் வழக்கில் அவரின் காதலரும் நடிகருமான சுராஜ் பன்ஜொலி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை ஜிஹா கான். நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த ஜிஹா கான் லண்டனில் படித்துள்ளார். மும்பையில் குடியேறிய ஜிகா தான் பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். ராம்கோபால் வர்மாவின் நிசாபத் படத்தின் மூலம் கடந்த 2007 ஆம் ஆண்டில் அறிமுகமான ஜிஹா கான் , தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் ஹிந்தியில் வெளியான கஜினி திரைப்படத்திலும் நடித்திருந்தார். 2013 ஆம் ஆண்டில் ஜூன் 3ஆம் தேதி அன்று மும்பையில் உள்ள ஜூஹி நகரில் தனது வீட்டின் படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தற்கொலைக்கு முன்பாக எழுதிய தற்கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதன் பின்னர் நடிகை தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடந்து வந்தது.

இதில் அவரின் காதலரும் நடிகருமான சுராஜ் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜூலை மாதத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் . சுராஜ் தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக, ஜிஹாவின் தாயார் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் கடந்த 2018 ஆம் ஆண்டில் சுராஜ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜிஹா கானை தற்கொலைக்கு தூண்டியதாக சுராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மும்பையில் சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. ஜிஹா கான் தற்கொலை வழக்கில் புதிய ஆதாரங்கள் இல்லாததால் சுராஜ் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளது நீதிமன்றம்.