குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று தாயும் குதித்து விபரீத முடிவு!!

633

ராணிப்பேட்டையில்..

குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை கொன்றுவிட்டு தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். குடும்பத்தகராறில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு அடுத்த மேல் புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். சென்னை கோயம்பேட்டில் சலூன் கடையில் இவர் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி ரேணுகா. இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் சுருதி என்ற மகளும் மூன்று வயதில் தீபக் என்ற மகனும் இருந்தனர்.

இன்று மாலையில் நாலு மணி அளவில் மேல் புலம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் ரேணுகா, சுருதி, தீபக் மூன்று பேரும் சடலமாக மிதந்து இருக்கிறார்கள். தகவல் அறிந்த கலவை போலீசார் மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர் .

சங்கர் சென்னையில் வேலை செய்து வருவதால் 15 நாளுக்கு ஒருமுறைதான் வீட்டிற்கு வந்து சென்று இருக்கிறார். இந்த நிலையில் சங்கரின் தாய் சரஸ்வதி மருமகள் ரேணுகாவை பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.  இதில் மன வேதனை அடைந்த ரேணுகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் .

தற்கொலைக்கு முன்பாக தனது குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்து மகன் மற்றும் மகளை அழைத்துச் சென்று முதலில் கிணற்றில் தள்ளி கொன்று விட்டு , பின்னர் தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.