கணவனை தீ வைத்து எரித்து கொலை செய்த மனைவி… நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!!

469

விழுப்புரத்தில்..

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.வி.நகரில் சேதுபதி (23) என்ற இளைஞர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரும் அதே பகுதயை சேர்ந்த முருகவேணி (19) என்ற பெண்ணுடன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த கையொடு தனியாக வசித்துவந்தனர்.

இந்த நிலையில், திருமணமாகி 20 நாட்கள் மட்டுமே முடிந்த நிலையில் 01.08.2019ஆம் தேதி சேதுபதி வீட்டினுள் படுத்திருந்தத போது குடிசை வீ்ட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் சேதுபதி உடல்கருகி உயிரிழந்தார்.

பின்னர் உடல்கருகிய நிலையில் சேதுபதியி்ன் உடல் மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய திண்டிவனம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேதுபதியின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சேதுபதியின் தந்தை தட்சணாமூர்த்தி அளித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சேதுபதியின் வீடு தீப்பிடித்து எரிந்த போது வீட்டின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

இதனையடுத்து சேதுபதியை கொலை செய்தது யார் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, சேதுபதியின் மனைவி முருகவேணியிடம் விசாரணை மேற்கொண்டபோது, போதைக்கு அடிமையான சேதுபதி தன் மனைவி முருகவேணியை பலவிதத்தில் கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதனால் முருகவேணி போதையில் படுத்து இருந்த சேதுபதிமீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து வீட்டுக்கு வெளியே வந்து கதவை வெளிபக்கமாக பூட்டியது தெரியவந்தது . இதையடுத்து முருகவேணியை போலீசார் கைது செய்தனர்.

கணவனை கொன்ற வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைகள் முடிந்த நிலையில் நீதிபதி ரகுமான் முருகவேணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ5000ம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் முருகவேணியை கடலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.