வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மாபெரும் இரத்தான முகாம் : அனைவருக்கும் அழைப்பு!!

557


இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.



அந்த வகையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 2014 உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்தான முகாம் பாடசாலை வளாகத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (01.05.2023) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரை இடம்பெறவுள்ளது.





‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ள இரத்ததான முகாமில் பாடசாலை பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் என அனைவரது பங்களிப்பினையும் கோரி நிற்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.