காவல் நிலையத்தில் கதறியழுத தாய்.. காதலனுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த மகள்!!

694

தமிழகத்தில்..

காதல் திருமணம் என்பது இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமாகி வருகிறது. ஆனால் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்வதால் பெற்றவர்களின் மனம் எத்தனை பாதிக்கப்படும் என்பதை பிள்ளைகள் யோசிப்பதே இல்லை.

இத்தனை நாள் வளர்த்த தாய், தந்தையை விட்டு ஒரு வருடம் கூட பழகிப் பார்க்காத ஒருத்தரை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்பது வயது காலத்தில் இன்றைய இளைய சமூதாயம் அறிவதே இல்லை.

சரியான புரிதலும், திட்டமிடலும் இல்லாத திருமணம் நாளடைவில் சண்டையும், சச்சரவுமாகிப் போகும். பின்னர் கண்ணீர் வடித்து பிரயோசனமில்லை என்பதை பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை.

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பென்னாகரம் பகுதியில் வசித்து வருபவர் சுந்தர்ராஜன். இவரது மகள் ஸ்ரீபவானி. இவர் அதே ஊரில் வசித்து வரும் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வீட்டில் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மாயமான நிலையில், பெண்ணின் பெற்றோர் மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அத்துடன் நில்லாமல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தனர்.

அதன் பிறகு காவல்துறையினரின் தீவிர விசாரணையில் இவர்களின் மகள் ஸ்ரீபவானி, கார்த்திக்குடன் திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது.

இதில் கார்த்திக் திருமண வயதை எட்டாததால் பெண்ணின் பெற்றோர் இருவரையும் பிடித்து துறையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கார்த்திக் திருமண வயதை எட்டாத நிலையில் அது குறித்தும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீபவானியின் பெற்றோர் தங்கள் மகளைத் தங்களுடன் அனுப்பி வைக்கும்படி கதறி அழுதனர். அப்போது கார்த்திக் பெண்ணின் தாய் சுமதியின் கையை பலமாக தாக்கினார். இதனால் பெண்ணின் தாயாரின் கையில் இருந்து ரத்தம் வழிந்தோடியது.

அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால் காவல் நிலையத்திலேயே மயக்கம் அடைந்து சுமதி கீழே விழுந்தார். சுமதியின் கணவர் அதாவது பெண்ணின் தந்தை சுந்தர்ராஜன் காவல் நிலையத்தில் கார்த்திக் மீது புகார் கொடுத்தார். பின்னர் சுமதி 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

காதல் திருமணம் செய்த மகள் மீது மண்ணை அள்ளி வீசி தாய் சாபமிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

தாய் சோகத்தில் அரற்றிக் கொண்டிருந்த போது, அவரது மகள் ஸ்ரீபவானி, தனது காதல் கணவன் கார்த்திக்குடன் சிரித்தப்படியே பேசுகிற காட்சி, சினிமாவில் மட்டுமல்ல… நிஜத்திலும் அரங்கேறியது அங்கே கூடியிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காதலுக்கு கண்கள் இல்லை தான் போல!