ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் சடலங்களாக மீட்பு!!

1234

கெட்டயாபத்தனையில்..

குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மத்துரட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டயாப்பத்தன வடுவா ஆற்றில் இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப் பிரதேசத்தில் கெட்டயாபத்தனை கிராமத்தில் வசித்த டப்ளியூ. ஜி. அசேல ஹிதுவர (வயது 12) என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இவரின் சடலம் சம்பவ தினத்தன்று இரவு 09.30 மணியலவில் மீட்க்கப்பட்டுள்து.

அதேநேரம் நீரில் மூழ்கி மாயமான சகோதரி இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்துரட்ட பொலிஸார் தெரிவிதித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறுவர் மற்றும் சிறுமியின் சடலங்கள் பிரேத பரிசோதணைக்காக ரிக்கில்லகஸ்கட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.