மீள ஆரம்பிக்கிறது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை..!

697

1990ம் ஆண்டு மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் காலங்களில் சர்வதேச ரீதியில் டென்டர்களை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை சீமெந்து கூட்டுத்தாபன மற்றும் சீமெந்து நிறுவன தலைவர் சட்டத்தரணி என்.எஸ்.எம்.சம்சுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதால் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் அளவை நூற்றுக்கு 25 வீதம் குறைக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.