குடிபோதையில் மனைவியை அடித்த கணவர்.. வீரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு!!

664

கொருக்குப்பேட்டையில்..

கொருக்குப்பேட்டை தங்கவேல் தோட்டம் ரகுபதி. இவர் சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரியங்கா. இவர்களுக்கு 8 ஆண்டுகள் முன்பு திருமணமாகி 4 மற்றும் 2 வயதில் மகன்கள் உள்ளனர்.

இவர்கள் கடந்த 2 வருடமாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக ரகுபதி குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துவந்ததாக கூறப்படுகிறது.

அதே போல் தேற்று முன்தினம் இரவு ரகுபதி வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்து உள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அதில் மனைவியை போட்டு அவர் அடித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் வீரக்தி அடைந்த பிரியங்கா, வீட்டில் உள்ள அறைக்குள் சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொருக்குப்பேட்டை காவல் துறையினர் பிரியங்கா உடலை மீட்டு உடற் கூராய்விற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கொருக்குப் பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பிரியங்காவின் தந்தையான புதுவண்ணாரப்பேட்டையை சமேஷ், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்து உள்ளார்.

பிரியங்காவின் உடற் கூராய்வு அறிக்கை வந்த பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும்.