வவுனியாவில் போரினால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நினைவு : சிங்கள மக்களும் கலந்து கொண்டனர்!!

1766

போரினால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நினைவு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (18.05.2023) மாலை இடம்பெற்றிருந்தது. போரினால் உயிரிழந்த உறவுகளின் ஒழுங்கமைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நினைவேந்தலில்,

போரின் போது உயிரிழந்த சிங்கள, தமிழ், முஸ்ஸிம் மக்களின் நினைவாக மத்தலைவர்கள் இணைந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் ஆரம்பமாகியதுடன்,

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்களது அருகேயிருந்த சுடர்களை ஏற்றியிருந்தனர். அத்துடன் சமாதானத்தினை வலியுறுத்தி மதத்லைவர்களினால் புறாக்களும் பறக்கவிடப்பட்டன

இன் நினைவேந்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் என்.கருணாநிதி,

சிவசேனை அமைப்பினர், வர்த்தக சங்க தலைவர், முச்சக்கரவண்டி சங்க தலைவர், வவுனியா கந்தசாமி கோவில் நிர்வாகத்தினர், ஐக்கிய தேசியக் கட்சியினர், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் கட்சி, இன, மத வேறுபாடின்றி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, இதில், அதிகளவிலான சிங்கள மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.