தமிழ் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட கொடுமை : மூன்று இளைஞர்களை தேடும் பொலிஸார்.!!

787


குருநாகலில்..



குருநாகல் நகரிலிருந்து காத்தான்குடி செல்ல வழிதெரியாமல் நின்றிருந்த சிறுவனை மூன்று இளைஞர்கள் சேர்ந்து துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் (19.05.2023) பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



காத்தான்குடியில் இருந்து குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினர் ஒருவரைப் பார்ப்பதற்காக 14 வயது சிறுவன் ஒருவர் நேற்று முன்தினம் (17.05.2023) தனியாக குருநாகல் வந்துள்ளார்.




எனினும் திரும்பிச் செல்லும் போது அவருக்குச் சிங்கள மொழி தெரியாத காரணத்தினால், மட்டக்களப்பு பேருந்துக்குப் பதில் வாரியபொலை ஊடாக அனுராதபுரம் செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டுள்ளார்.


இடைவழியில் டிக்கெட் எடுக்கும் போது விடயமறிந்த நடத்துநர் குறித்த சிறுவனை யந்தம்பலாவ நகரில் இறக்கி விட்டுச் சென்றுள்ளார். அங்கிருந்து குருநாகல் வர வழி தெரியாமல், சிங்கள மொழியும் தெரியாமல் தவித்த குறித்த சிறுவன், கடைசியில் யந்தம்பலாவை நகரில் இருந்த லீசிங் நிறுவனம் ஒன்றின் முன் நின்று கொண்டிருந்த இளைஞர்களிடம் சென்று தமிழில் வழி கேட்டுள்ளார்.

நிறுவனத்தின் உள்ளே அச்சிறுவனை அழைத்துச் சென்ற அங்கிருந்த மூன்று வாலிபர்களும் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அவனை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.


கடுமையான வலியுடன் பாதைக்கு வந்த சிறுவன் அங்கு வந்த முஸ்லிம் இளைஞர்களிடம் நடந்ததை விவரித்துள்ளார். அவர்கள் நகரின் ஐக்கிய வர்த்தகர் சங்கம் ஊடாக குறித்த நிதி நிறுவனத்துக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனினும் பொலிஸார் வருவதற்கு ஏற்பட்ட தாமதத்தைப் பயன்படுத்தி சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.