கிறீம் பூசினால் அழகாய் இருப்பீர்கள் : யாழில் ஆசிரிய ஆலோசகரால் வாயடைத்துப்போன ஆசிரியை!!

8023

யாழில்..

யாழ். வலய ஆசிரிய ஆலோசராக கடமையாற்றும் ஆண் ஒருவர் பாடசாலை ஒன்றிற்கு கடமையின் நிமித்தம் சென்றுள்ளார். குறித்த ஆண் ஆசிரியர் பாடசாலைக்குள் திடீரென சென்று ஆசிரியர்களுடன் ஏதோ பேசி உள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை இதுவரை காலமும் யாரென அறியாத அப்பாடசாலை ஆசிரியர்கள் யார் நீங்கள் என சில ஆசிரியர்கள் கேள்வி எழுப்பினர். இதன் போது பாதிலளித்த குறித்த ஆசிரிய ஆலோசகர் , நான் தீபக வலயத்தில் இருபது வருடங்கள் கடமையாற்றி விட்டு யாழ். வலையத்திற்கு வந்த ஆசிரியர் ஆலோசகர் நான் தான் என்றாராம்.

திடீரென ஒரு வகுப்புக்கு சென்று அங்கிருந்து ஆசிரியரிடம் வினாக்களை கொடுத்தபோது சில ஒவ்வாத வார்த்தை பிரயோகங்களை பிரியோகித்ததுடன் நீங்கள் கிறீம் பூசுவது இல்லையா? பூசினால் அழகாய் இருப்பீர்கள் என புது டிப்ஸ் கொடுத்துள்ளார்.

ஆத்திரமடைந்த ஆசிரியர் உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அண்மைக்காலமாக யாழ். வலயத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து பல முறைப்பாடுகள் வெளிவரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ். வலயக் கல்விப் பணிப்பாளரை ஊடகவியலாளர் ஒருவர் தொடர்பு கொண்டு கேட்டபோது,

குறித்த ஆசிரிய ஆலோசகர் பாடசாலை சென்ற போது தமக்கு அறிவிக்காமல் சென்றதாகவும் பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தமக்கு செவி வழி மூலமான முறைப்பாடு கிடைத்ததாகத் தெரிவித்தார்.