மகனுக்கு திருமணமாகாத கவலையில் தீக்குளித்த தாய்.. பாசத்தில் மகன் எடுத்த விபரீத முடிவு!!

368

சென்னையில்..

சென்னை மாவட்டம் புது வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவர் ராணுவ மருத்துவமனையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 57 வயதான நாகேஸ்வரி என்ற மனைவியும் 34 வயதான நவீன மகனும், 32 வயதான விவேக் மற்றும் மகனும் உள்ளனர்.

30 வயது கடந்து மகன்களுக்குத் திருமணம் ஆகவில்லை என நாகேஸ்வரி வருத்தத்தில் இருந்து உள்ளார். இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

விரைவில் மகன்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் எனத் தனது கணவரிடம் நாகேஸ்வரி அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம்போல் நேற்று காலை மகன்களின் திருமணம் தொடர்பாக நாகேஸ்வரி கணவரிடம் பேசியுள்ளார்.

இது குறித்து மனைவியை அசோகன் கண்டித்துள்ளார். மகன்களுக்குத் திருமணம் நடைபெறவில்லை என்ற வேதனையில் இருந்த நாகேஸ்வரி திடீரென சமையலறையில் இருந்த மண்ணெண்ணெய்யைத் தனது உடலில் ஊற்றித் தீக்குளித்துள்ளார்.

இதனால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே நாகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று மாலை நாகேஸ்வரிக்கு இறுதிச்சடங்கு நடைபெற்று உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது மகன் விவேக் மனமுடைந்துள்ளார்.

தாயின் இழப்பைத் தாங்க முடியாத விவேக், தானும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் விவேக் திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்துக் கொண்டு காசிமேடு நாகூர் தோட்டம் பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்குள்ள காலி இடத்தில் மண்ணெண்ணெய்யைத் தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார். உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே விவேக் உயிர் இழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு ரியல் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது தாய் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொண்டதை விவேக் நேரில் பார்த்துத் துடித்துள்ளார். அதன் காரணமாக விவேக்கும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது.

தற்போது இது தொடர்பாக புது வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயும், மகனும் அடுத்தடுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.