மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்று விட்டு குழந்தைகளுடன் தப்பியோடிய கணவர்!!

652

திண்டுக்கல்லில்..

மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு குழந்தைகளுடன் தப்பியோடிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார் குடும்ப பிரச்சனையில் மனைவியை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரின் மனைவி மாலதி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கொத்தனார் வேலை செய்து வரும் திருமூர்த்தி அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து போதையில் மாலதியுடன் தகராறு செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று மதியம் மது போதையில் மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது .

இதில் ஆத்திரமடைந்த திருமூர்த்தி , மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்து இருக்கிறார். அதன் பின்னர் இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தலைமறைவாகி இருக்கிறார் .

மதியம் இந்த சம்பவம் நடந்த நிலையில் இரவு வெகு நேரமாகிய வீட்டில் மின்விளக்குகள் எரியாததை கண்டு அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்திருக்கிறார்கள்.

அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மாலதி சடலமாக கிடந்திருக்கிறார். இதன் பின்னர்அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாலதியின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர் .

போலீசாரின் மேற்கட்ட விசாரணையில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு இரண்டு குழந்தைகளுடன் தலைமறைவாகி இருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

பழனி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து திருமூர்த்தியை தேடி வந்த நிலையில் அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சனையால் மனைவியின் தலைவியில் கல்லை போட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.