2 குழந்தைகளை கொலை செய்த தாய் எடுத்த விபரீத முடிவு!!

991

திருச்சி..

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் வசித்து வருபவர் 33 வயது மனோஜ்குமார். இவருடைய மனைவி 26 வயது ஷோபனா. இவர்களுக்கு 3 வயதில் தஷ்வன், 11 மாதமே ஆன கபிஷன் என இருக்குழந்தைகள்.

பர்னிச்சர் கடை உரிமையாளரான மனோஜ்குமாருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சொந்தத்தொழிலை விட்டுவிட்டு தற்போது ஸ்ரீரங்கத்தில் உள்ள சாந்தி பர்னிச்சரில் பணிபுரிந்து வருகிறார்.

தொழிலில் நஷ்டமடைந்த பின் அவ்வப்போது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டையும், சச்சரவும் தொடர்ந்தது.

இந்நிலையில் பணி நிமித்தமாக மனோஜ் கொடைக்கானல் சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார்.

மனைவி மற்றும் குழந்தைகள் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் தொங்கியதை கண்டு மனோஜ் குமார் அலறிக் கூச்சலிட்டார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இச்சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.