இலங்கையில் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நாய்.!!

938

திருகோணமலையில்..

திருகோணமலையில் காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்த தனது எஜமானரின் உடலை வேறு எவருக்கும் எடுத்துச் செல்ல அனுமதிக்காத நாய் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம் மஹாந்தரவெவ தல்கஸ்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. மஹாந்தரவெவ பாடசாலைக்கு அருகில் வசித்து வந்த 3 பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய A.H.M சமந்த அபேசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது நண்பர்கள் இருவருடன் வனப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது அவர்களுக்கு எதிரே காட்டுயானை ஒன்று வந்துள்ளது. நண்பர்களில் ஒருவர் மரத்தின் மீது ஏறிக்கொண்டுள்ளார். மற்றைய நண்பர் புதரில் ஒழிந்து கொண்டுள்ளார்.

3 பிள்ளைகளின் தந்தையும் நாயும் தனியாக இருந்ததால் நாய் தனது எஜமானரைக் காப்பாற்ற குறைத்துக்கொண்டு பலமுறை யானையை நோக்கி முன்னோக்கி பாய்ந்துள்ளது. நாயைத் தாக்க முயன்ற காட்டுயானை குறித்த குடும்பஸ்தரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இருப்பினும், அவரது சடலத்தை எடுக்க நாய் யாரையும் அனுமதிக்காது காவல் காத்துள்ளது. இறுதியாக நெருங்கிய உறவினர்கள் வந்த பின்னரே, சடலத்தை எடுத்துச் செல்ல நாய் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.