ஆண் வேடமிட்டு மாமியாரைக் கொலைசெய்த மருமகள்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி!!

490

நெல்லையில்..

நெல்லை, துலுக்கர்குளம் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமம், வடுகன்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் (வயது 63) என்பவர் துலுக்கர்குளம் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்துவருகிறார்.

அவரின் மனைவி சீதாராமலெட்சுமி (58). இந்தத் தம்பதிக்கு ராமசாமி என்ற மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் சீதாராமலெட்சுமி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சீதாராமலெட்சுமியின் மகன் ராமசாமிக்குத் திருமணமாகிவிட்டது. அவருடைய மனைவி மகாலட்சுமி. ராமசாமி-மகாலட்சுமி தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

மூத்த மகனுக்கு ஐந்து வயதும், இளைய மகனுக்கு 10 மாதமும் ஆகிறது. திருமணமானதிலிருந்தே மகாலட்சுமிக்கும் அவருடைய மாமியாருக்குமிடையே சுமுகமான உறவு இருக்கவில்லை என அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாமியார்-மருமகளிடையே அடிக்கடி வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டு வந்திருக்கிறது. அதனால் ராமசாமி தனிக்குடித்தனம் போக ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அவர்களைத் தனியாக அனுப்ப விரும்பாத சீதாராமலெட்சுமி, தனது வீட்டின் பின்பக்கத்தில் தனியாக வீடு கட்டிக் கொடுத்து அதில் மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் வைத்திருக்கிறார்.

அருகருகே மாமியார்-மருமகள் வசித்ததால் இருவருக்குமிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு இருந்துவந்திருக்கிறது. அதனால் ஆத்திரத்திலிருந்த மகாலட்சுமி, ஒருகட்டத்தில் தன்னுடைய மாமியாரைத் தீர்த்துக் கட்டினால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும் என நினைத்திருக்கிறார். அதற்கான சரியான சந்தர்ப்பத்துக்காக அவர் காத்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அண்மையில் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் வெளியே சென்றுவிட்ட நிலையில், மாமியார் சீதாராமலெட்சுமி மட்டும் வீட்டில் படுத்திருப்பதைப் பார்த்த மருமகள் மகாலட்சுமி, தனக்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக நினைத்திருக்கிறார். அதனால் அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி மாமியாரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்திருக்கிறார்.