தென் தாய்லாந்தில் குண்டுத் தாக்குதல்; 8 படையினர் பலி..!

555

தாய்லாந்தில் தெற்குப் பிராந்தியத்தில் நடந்துள்ள வீதியோரக் குண்டுவெடிப்பில் படைச்சிப்பாய்கள் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

யால மாகாணத்தில் குரோங் பினாங் மாவட்டத்தில் இராணுவ வாகனங்களை இலக்குவைத்து சக்திமிக்க இந்தக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் இராணுவ ட்ரக் வண்டி முழுமையாக சேதமடைந்துவிட்டதாக காவல்துறை பேச்சாளர் கூறினார்.

வாகனத்திலிருந்த 10 படையினரில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றைய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் தாய்லாந்து படையினர் மீது நடந்துள்ள மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தப் பிராந்தியத்தில் 2004-ம் ஆண்டில் பிரிவினைவாதக் கிளர்ச்சி தொடங்கியதிலிருந்து ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். (BBC)

thailand