நண்பன் இறந்த சோகத்தில் விபரீத முடிவெடுத்த இளைஞன்!!

427

ராணிப்பேட்டையில்..

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோமசுந்தரம் நகரைச் சேர்ந்தவர் விஷால் (19). அதேபகுதியை சேர்ந்த அஜித் (20) ஆகிய இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்துள்ளனர். இருவரும் எப்போதும், எங்கே சென்றாலும் ஒன்றாக சென்று நண்பர்களாக அப்பகுதியில் வலம்வந்தனர்.

இதனிடையே, கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு விஷால் கடந்த 28ஆம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை அறிந்துசென்ற விஷால், நண்பனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

எனினும் தனது நண்பன் இறக்கவில்லை, அவனை காப்பாற்ற வேண்டும் என கதறி அழுதுள்ளார். பின்னர் மருத்துவர்கள் சென்று பரிசோதனை செய்ததில், விஷால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இளைஞர் விஷால் உடல் அக்கிராமத்தில் புகைக்கப்பட்டது. இளைஞர் அஜித், தனது நண்பனை புதைத்த இடத்திலேயே இரவும் பகலும் இருந்துள்ளார். அவரை புதைத்த இடத்தில் மதுவை ஊற்றி, ஸ்வீட், பழங்களை படையலிட்டு அழுதும் வந்தார்.

இந்நிலையில், துக்கம் தாங்காமல் இருத்த விஷால் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதுவும் விஷால் தூக்கிட்ட அதே கயிற்றில், அஜித்தும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர், அவரது உறவினர்கள், விஷால் உடல் புதைத்த இடத்திற்கு பக்கத்திலேயே, அஜித் உடலையும் புதைத்தனர். அஜித் இறப்பதற்கு முன் அதிகாலை, 2.50 மணிக்கு விஷாலுடன் எடுத்துக் கொண்ட படங்களை, வாட்ஸ்அப்’பில் ஸ்டேட்டஸ் வைத்தார். அதில், நானும் வருகிறேன்.. என, பதிவிட்டிருந்தார்.

அஜித் பெயரை விஷாலும், விஷால் பெயரை அஜித்தும் மார்பில் பச்சை குத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இணை பிரியாத நண்பர்களாக இருந்த இருவரும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.