யாழில் 10 வயது சிறுவன் கைது.. வெளியான காரணம்!!

2054

யாழில்..

உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் யாழில் 10 வயது சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். வடமராட்சி, துன்னாலையைச் சேர்ந்த சிறுவன் பாடசாலையை விட்டு இடைவிலகிய நிலையில்,

உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளார். விசாரணைகளின் போது வேறு பல சிறுவர்களும் ஹெரோய்னை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

உயிர்கொல்லி ஹெரோய்னை ஊசி மூலம் மேற்படி சிறுவன் பயன்படுத்திய நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே நேற்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.