வேலைக்கு போகாதே என்று கண்டித்த கணவர் : குழந்தையோடு மனைவி எடுத்த விபரீத முடிவு!!

5621

காஞ்சிபுரத்தில்..

வேலைக்கு செல்லாமல் குழந்தையை கவனித்து கொள்ள கட்டாயப்படுத்திய கணவனால், தனது பிள்ளையை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். கார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சரண்யா என்ற இளம்பெண்ணுடன் திருமணமாகியுள்ளது.

இந்த தம்பதிக்கு ஜிஷ்ணு என்ற 3 வயது ஆண் குழந்தை இருக்கும் நிலையில், குழந்தையை சரண்யா மட்டும் கவனித்து வந்துள்ளார். இந்த சூழலில் பி.இ படித்திருக்கும் சரண்யா தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று தனது கணவரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு மதன் குமாரோ மறுத்துள்ளார். இருப்பினும் சரண்யா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நினைவுத்திறன் வளர்க்கும் பயிற்சி மையத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனால் குழந்தையை கவனிக்க ஆள் இல்லாமல் இருந்துள்ளது.

எனவே வேலைக்கு செல்லவே கூடாது என்று மதன் குமார், தனது மனைவி சரண்யாவிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் மதன் மிகவும் கண்டிப்பாக தனது மனைவியிடம் கூறியுள்ளார். இந்த விவகாரத்தால் சரண்யா மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். எனவே சம்பவத்தன்று தனது வீட்டில் யாரும் இல்லாத போது அறையில் தற்கொலை செய்ய எண்ணியுள்ளார்.

எனவே குழந்தையை தூக்கி தொங்க விட்டு கொலை செய்து, பின்னர் தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார் சரண்யா. வீடு திரும்பிய மதன், இதனை கண்டு பெரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சடலங்களை மீட்டு உடற்கூறைவுக்கு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் மதன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி சில ஆண்டுகளே ஆன நிலையில், வேலைக்கு செல்ல கூடாது என கணவர் கண்டித்ததால், இளம்பெண் தனது குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.