காதலியை வெட்டி வீசி விட்டு ரயிலில் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்த இளைஞன்!!

729

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கல்லுத்தொட்டியைச் சேர்ந்தவர் இளைஞர் பெர்ஜின் ஜோஸ் (23). இவர் கல்லூரியில் பிஏ படித்தபோது, தன்னுடன் படித்த டேன்நிஷா (23) என்ற பெண்ணை காதலித்தார்.

காதலர்களான இருவரும் நெருக்கி பழகி வந்தனர். தற்போது டேன்நிஷா பிஎட் படித்து வருகிறார். இளைஞர் பெர்ஜின் ஜோஸ் அரசு தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் காதலர்கள் இருவருக்கும் இடையே திடீரென சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், டேன்நிஷா காதலனை தவிர்க்க தொடங்கியுள்ளார். இது பெர்ஜினுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பலமுறை பேச முயன்றும் இளம்பெண் பிடிகொடுக்காமல் தவிர்த்து சென்றுள்ளார்.

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த பெர்ஜின், இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார். தொடர்ந்து அவர்களுக்குள் பிளவு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டேன்நிஷாவுக்கு போன் செய்து பேசிய பெர்ஜின் ஜோஸ், லேப்டாப்பில் உள்ள போட்டோக்கள் அனைத்தையும் உனது முன்னிலையில் டெலிட் செய்து விடுகிறேன், நேரில் வா என்று அழைத்துள்ளார்.

அதை ஏற்று வந்த டேன்நிஷாவை அழைத்துக் கொண்டு பைக்கில் விரிகோடு அருகே காக்கட்டான்குளம் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது லேப்டேப்பில் உள்ள படங்களை டெலிட் செய்யுமாறு டேன்நிஷா கூறியுள்ளார்.

ஆனால் அங்கு வைத்து அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பெர்ஜின் ஜோஸ் தனது பைக்கில் ஏற்கனவே தயாராக வைத்திருந்த அரிவாளை எடுத்து டேன்நிஷாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே வாகனத்தில் சென்றவர்கள் வரவே, பெர்ஜின் ஜோஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் வெட்டு காயத்துடன் போராடிய டேன்நிஷாவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் பெர்ஜின் ஜோஸ், விரிகோடு முண்டவிளை பகுதியில் சென்ற பயணிகள் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் பெர்ஜின் உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.