திருமணம் நடக்காத விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

594

ஜார்கண்ட்டில்..

ஜார்கண்ட் மாநிலம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு டக்கென்று நினைவுக்கு வருவது சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிதான். தோனியின் சொந்த ஊர் அதுதான் என்பதால் ஒரு பிணைப்பு. இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் முடிவு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு ஸ்வேதா (23) என்ற இளம்பெண் பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு திருமணம் முடிக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். இவரை 3க்கும் அதிகமான மாப்பிள்ளை வரனாக பார்த்துசென்றும் திருமணம் முடிவாகவில்லை.

மேலும், பெண்மணி குள்ளமாக இருந்த காரணத்தால், மணமகன்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் ஸ்வேதாவுக்கு தெரியவந்தது. இதனால் மனமுடைந்த ஸ்வேதா விபரீத முடிவை எடுத்தார். வீட்டில் தனியாக இருந்தபோது தமது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வீடு திரும்பிய பெற்றோர் மகளின் நிலையை பார்த்து கதறி அழுதனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் ஸ்வேதா தற்கொலை முடிவுக்கு வேறுஏதும் காரணம் உள்ளதா எனவும் விசாரணை நடத்துகின்றனர்.