வவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை.. ஒருவர் அதிரடியாக கைது!!

1907

வவுனியாவில்..

வவுனியா கோவில்குளம் சந்தியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான பிரீகபலின் ‘Pregabalin’ மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 300 போதை மாத்திரைகளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வவுனியாவை சேர்ந்த 41 வயதுடையவர் என்றும் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.